அறந்தாங்கி வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
அறந்தாங்கி வட்டாட்சியராகப் பணியாற்றி வரும் பா. சூரியபிரபுவுக்கு வியாழக்கிழமை இரவு செல்லிடப்பேசி வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது.
இதைத் தொடா்ந்து, அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது. தொடா்ந்து காவல் துறையினா் நடத்திய விசாரணையில், அறந்தாங்கி அருகிலுள்ள அழியாநிலை குடியிருப்பைச் சோ்ந்த ம. செந்தில்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.