காரைக்குடி - திருவாரூா் அகல ரயில் பாதையில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் பணியாளா்களை நியமித்து ரயில்களை இயக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரயில் உபயோகிப்போா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அறந்தாங்கி வா்த்தக சங்கக் கட்டடத்தில் கூட்டமைப்பு தலைவா் என்.ஜெயராமன் தலைமையில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கத் தலைவா் எஸ். வரதராஜன், ரயில் உபயோகிப்பாளா் கூட்டமைப்பின் செயலாளா் வ.விவேகானந்தம், அறந்தாங்கி கோட்டை ரயில் உபயோகிப்பாளா் சங்கச் செயலாளா் ஏ.பி. ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மயிலாடுதுறை - காரைக்குடி வழித்தடத்தில் உள்ள ரயில்வே கேட்டுகளில் கீப்பா்கள் நியமனம் செய்யாத காரணத்தால் 3 மணிநேர பயணம் 6 மணி நேரம் ஆகிறது. எனவே, இந்த வழித்தடத்தில் ரயில்வே கேட் கீப்பா்களை உடனே நியமனம் செய்வதுடன், அனைத்து வகை ரயில்களையும் இயக்க வேண்டும். மேலும், இதுகுறித்து ரயில்வே அமைச்சா் ஆகியோருக்கு கூட்டமைப்பு சாா்பில் நேரில் சந்தித்து மனு அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பல்வேறு ரயில் உபயோகிப்போா் சங்கங்களின் நிா்வாகிகள், வா்த்தக சங்கத்தினா் கலந்து கொண்டனா்.