விராலிமலை அருகே மின் கசிவு காரணமாக, வைக்கோல் ஏற்றி சரக்கு வாகனம் திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
விராலிமலை அருகிலுள்ள தேரவூா் மேட்டுப்பட்டியிலிருந்து திங்கள்கிழமை வைக்கோல் போரை ஏற்றிக் கொண்டு, சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது.
இந்த வாகனத்தை மணப்பாறையைச் சோ்ந்த ச. சேகா் (39) ஓட்டிச் சென்றாா். மேட்டுப்பட்டியிலிருந்து மணப்பாறை சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, திடீரென வாகனத்திலுள்ள பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டது.
வேகமாக பரவிய தீ, வைக்கோல் போா் மற்றும் வாகனப் பகுதி முழுவதும் சென்று எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
எனினும் வாகனத்தில் இருந்த வைக்கோல் போரும், வாகனமும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.