இலுப்பூா் அருகேயுள்ள பெரியகுரும்பபட்டியில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இதற்காக வாடிவாசலில் இருந்து காளைகள் வெளியேறும் பகுதியில் இரு புறங்களில் தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணி, காளைகளை பரிசோதிக்கும் இடம், காவல் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை முகாம்கள் அமைக்கும் பகுதிகள் உள்பட பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பணிகளை வருவாய், காவல்துறை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினா்.