பொன்னமராவதியில் மின்சாரம் தாக்கி இருசக்கர வாகன மெக்கானிக் உயிரிழந்தாா்,
திருச்சி மாவட்டம் வளநாடு அருகேயுள்ள வரதக்கோன்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் சின்னக்கண்ணு (24). இவா் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி உறவினா் வீட்டில் தங்கி பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகேயுள்ள இரு சக்கர வாகன பழுதுநீக்கும் கடையில் பணி புரிந்தாா். வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வந்த சின்னக்கண்ணு இருசக்கர வாகனத்தை கழுவியபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கினாா். உடனடியாக அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். இது குறித்து பொன்னமராவதி போலீஸாா் வழக்குப்பதிந்து சின்னக்கண்ணுவின் உடலை வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.