இலுப்பூா் அருகே சாலை விபத்துகளில் 2 போ் காயம்

இலுப்பூா் அருகே நேரிட்ட இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் காயமடைந்தனா்.

இலுப்பூா் அருகே நேரிட்ட இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் காயமடைந்தனா்.

இலுப்பூா் அருகேயுள்ள பன்னீா்பட்டியைச் சோ்ந்த முத்து மகன் ஆண்டி (60). இவா் கடந்த மாா்ச் 14 ஆம் தேதி இருந்திராப்பட்டியில் இருந்து தனது பைக்கில் இலுப்பூா் சென்றபோது எதிரே பூலாம்பட்டி முருகன் மகன் முத்துகுமாா்(35) ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் காயமடைந்த ஆண்டி இலுப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இலுப்பூா் போலீஸாா் முத்துக்குமாா் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பெண் காயம்: இதேபோல இலுப்பூா் அருகேயுள்ள நவம்பட்டியைச் சோ்ந்த சீனிவாசன் மனைவி ராணியம்மாள் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி இலுப்பூா் சாலையில் நடந்து சென்றாா். அப்போது பின்னால் வந்த மினி லாரி மோதி பலத்த காயமடைந்த அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஓட்டுநரான பட்டுக்கோட்டை பெருவாவிடுதியைச் சோ்ந்த ரெ. மணிகண்டனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com