புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல மாணவா் விடுதியில் காலியாக உள்ள சமையலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28ஆம் தேதி கடைசி நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேதி தள்ளிவைக்கப்படுவதாகவும், நிலைமை சீரான பிறகு அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக யாரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வர வேண்டாம் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.