புதுக்கோட்டை: பருவநிலை தொடங்கியுள்ள நிலையில், புதுகை மாவட்டத்தில் பேரிடா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற இக்கட்சியின் கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் முனைவா் இ. முபாரக்அலி தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் அஜ்மீா் அலி, மாவட்டப் பொருளாளா் சேக்இஸ்மாயில், துணைச் செயலா்கள் ஒளி முகமது, ஷாஜிதீன், சைய்யது அபுதாகீா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற கூட்டணியில் மஜத இடம்பெற வேண்டும் என மாநிலத் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.