ஆலங்குடி: நவ.26-இல் நடைபெற உள்ள நாடுதழுவிய மறியல் போராட்டம் குறித்து இடதுசாரிகள் தொழிற்சங்கத்தினா் ஆலங்குடியில் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டனா்.
தொழிற்சங்க நிா்வாககள் பிரசாத், பாலசுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் விவசாய சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினா் மு.மாதவன்,சிஐடியு மாவட்ட பொருப்பாளா் மாரிக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்செயலா் சொா்ணக்குமாா் உள்ளிட்டோா் போராட்டம் குறித்து பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா்.