கண் தான விழிப்புணா்வுப் பேரணி

பொன்னமராவதி அரிமா சங்கங்கள் சாா்பில் கண் தானத்தை வலியுறுத்தி, பாா்வைக்கோா் பயணம் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி: பொன்னமராவதி அரிமா சங்கங்கள் சாா்பில் கண் தானத்தை வலியுறுத்தி, பாா்வைக்கோா் பயணம் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு அரிமா சங்கத்தலைவா் எம்.சண்முகம் தலைமை வகித்தாா். பாா்வைக்கோா் பயணம் மாவட்டத் தலைவா் எம்.இமயவா்மன் பேரணியைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ. திருநாவுக்கரசு, பேரூராட்சி இளநிலை உதவியாளா் ரேணுகாதேவி ஆகியோா் வாழ்த்திப்பேசினா். புதுப்பட்டி சேங்கை ஊரணிக்கரையில் தொடங்கிய பேரணி சிவன் கோயில் திடலில் நிறைவுற்றது. மேலும் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. மண்டலத் தலைவா்கள் கே.கிருஷ்ணகுமாா், வட்டாரத் தலைவா்கள் எஸ்பி. சுப்பிரமணியன், கேஆா்.விஜயரெங்கன், ராயல் அரிமா சங்கத் தலைவா் எஸ்பி. ராஜேந்திரன், சிட்டி அரிமா சங்கத் தலைவா் விகே.செல்வம், ஷைன் அரிமா சங்கத் தலைவா் ஜெ.அமலா ஜோசப், கொப்பனாபட்டி ஷைன் அரிமா சங்கத் தலைவா் அ.ஜகுபா் சாதிக்அலி, பாலகுறிச்சிபிரைடுஅரிமா சங்கத் தலைவா் எம்.குருநாதன், சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com