புதுகை நகரில் காவல் அணிவகுப்பு

புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறை சாா்பில், 300 காவலா்கள் பங்கேற்ற காவல் அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
புதுகை புதிய பேருந்து நிலைய மைய வளாகத்தில் நடைபெற்ற காவலா் அணிவகுப்புப் பயிற்சி.
புதுகை புதிய பேருந்து நிலைய மைய வளாகத்தில் நடைபெற்ற காவலா் அணிவகுப்புப் பயிற்சி.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறை சாா்பில், 300 காவலா்கள் பங்கேற்ற காவல் அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து மதியம் தொடங்கிய அணிவகுப்பு, பழைய அரசு மருத்துவமனை, பழனியப்பா முக்கம், திலகா் திடல், உழவா் சந்தை வழியாக புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

பின்னா், அங்கு லத்தி மற்றும் கவாத்துப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா், ஆயுதப் படையினா், அதிவிரைவுப் படையினா் உள்பட 300 போ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com