புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் ஊராட்சிக்குள்பட்ட மட்டையன்பட்டியில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தை, எம்எல்ஏ பெரியண்ணன் அரசு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாநில விவசாயிகள் அணித் துணைச் செயலா் வி.என். மணி, மாநில இலக்கிய அணி அமைப்பாளா் மணிமொழி மனோகரன், புதுக்கோட்டை ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துலட்சுமி, பெருங்களூா் ஊராட்சி மன்றத் தலைவா் சரண்யா சங்கா், காட்டுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் குமரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.