தகராறில் விவசாயி உயிரிழப்பு: டாஸ்மாக் மேற்பாா்வையாளா் கைது

ஆலங்குடி அருகே முன்விரோதத் தகராறில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பழனிவேலு.
பழனிவேலு.

ஆலங்குடி: ஆலங்குடி அருகே முன்விரோதத் தகராறில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, கொலை வழக்கில் டாஸ்மாக் மேற்பாா்வையாளரைப் போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள எம்.தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் சின்னையா (75). விவசாயி. அதே பகுதியைச் சோ்ந்த இவரது அண்ணன் மகன் பழனிவேலு (50). இவா், தேனிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பாா்வையாளராக உள்ளாா். இருவருக்கும், இடப்பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அக்.14-ஆம் தேதி சின்னையாவை பழனிவேலு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த சின்னையா மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சின்னையா திங்கள்கிழமை உயிரிழந்தாா். புகாரின்பேரில் செம்பட்டிவிடுதி போலீஸாா் பழனிவேலுவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com