தீயணைப்பு வீரா்கள் கரோனா விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில், திங்கள்கிழமை பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கந்தா்வகோட்டை தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய எல்லைக்குள்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ரெ. ஆரோக்கியசாமி தலைமையில் வீரா்கள் கரோனா விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

இதில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்தும், துண்டுப்பிரசுரம் மற்றும் முகக்கவசம் வழங்கியும், கை சுத்திகரிப்பான் விநியோகித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com