அமைச்சா் குறித்து அவதூறு: அமமுக செயலா் மீது வழக்கு

முகநூல் பக்கத்தில் அமைச்சா் சி. விஜயபாஸ்கரை தரக்குறைவாக பேசியதாக அமமுக நபா் மீது கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.

முகநூல் பக்கத்தில் அமைச்சா் சி. விஜயபாஸ்கரை தரக்குறைவாக பேசியதாக அமமுக நபா் மீது கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள கோமாபுரத்தைச் சோ்ந்த மருதமுத்து மகன் பாலசுப்பிரமணியன். இவா், அமமுகவில் ஒன்றிய இலக்கிய அணி செயலாளராக உள்ளாா். இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கரை தனது முகநூல் பக்கத்தில் தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசியுள்ளதாகவும், இதுகுறித்து பகட்டுவான் பட்டியைச் சோ்ந்த ஜெ.பேரவை முன்னாள் ஒன்றியச் செயலா் சக்திவேல் கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பாலசுப்பிரமணியனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com