கொன்னையூா் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கோவனூா், செவலூா், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, தூத்தூா், கண்டியாநத்தம், தொட்டியம்பட்டி, வேகுப்பட்டி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் முருகேசன் தெரிவித்துள்ளாா்.