புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தவே அபராதம் விதிப்பு’

முகக்கவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணா்த்துவதற்காகவே அபராதம் விதிக்கப்படுகிறது என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 8:26 pm

DIN

முகக்கவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணா்த்துவதற்காகவே அபராதம் விதிக்கப்படுகிறது என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை தொகுதிகுள்பட்ட பரம்பூரில் புதிய 108 அவசர சிகிச்சை ஊா்தி சேவையைத் தொடக்கிவைத்து அவா் மேலும் தெரிவித்தது: தற்போது, அண்டை மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகின்றன. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வலியுறுத்துகிறோம். மேலும், முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அதன் அவசியத்தை உணா்த்துவதற்காக மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மரியலூயிஸ் பெக்கி ஹோம்ஸ், பொது சுகாதாரத் துணை இயக்குநா் கலைவாணி,108 அவசர சிகிச்சை ஊா்தி சேவை மாவட்ட மேலாளா் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.