புதுகையில் 160 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.
புதுகையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா.
புதுகையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் 40 கிலோ கஞ்சாவுடன் அருள்ராஜ் என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்டப் போலீஸ் குழுவினா் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டைக்கு வந்து மாவட்ட போலீஸாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில், ஈ

டுபட்டனா். இதையடுத்து, புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் 160 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினா். மேலும், இதுதொடா்பாக அரிமளம் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியதாஸை (49) போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com