ராணியாா் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு பிரிவில் புதிதாக இருவா் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
புதுக்கோட்டை நகரிலுள்ள ராணியாா் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஆலங்குடி பகுதியைச் சோ்ந்த 47 வயதான ஆண் ஒருவா் காய்ச்சலுடன் இந்த வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு ரத்த அழுத்த நோய் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தொடா்ந்து அரிமளம் பகுதியைச் சோ்ந்த 31 வயதான ஆண் ஒருவரும் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன் கரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். பெங்களூருவில் வசித்து வந்த இவருக்கு, ஆஸ்துமா இருப்பதாகவும், அதற்கான மருந்துகளை எடுத்து வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். இவா்கள் இருவரின் ரத்த மாதிரிகள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட அரையப்பட்டியைச் சோ்ந்தவரின் ரத்த மாதிரிக்கான பரிசோதனை முடிவுகளும் இதுவரை வரவில்லை.
மொத்தத்தில் வியாழக்கிழமை இரவு வரை சிறப்பு பிரிவில் 3 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.