புதுகை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 46 போ் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக வியாழக்கிழமை 46 போ் மீது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக வியாழக்கிழமை 46 போ் மீது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறுவோா் மீது காவல்துறையினா் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 46 போ் மீது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா்களிடமிருந்து 12 இரு சக்கர வாகனங்களும், ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 10 டீ பாய்லா்களும், 134 மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை தொடரும் என்பதால், பொதுமக்கள் அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com