ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவும் பணிகளை, புதுக்கோட்டை நகரிலுள்ள தன்னாா்வலா்கள் பலரும் செய்து வருகின்றனா்.
புதுக்கோட்டை நகா்மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவா் எஸ்ஏஎஸ். சேட்டு தனது சொந்தப் பணத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.500 மதிப்பில் தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்ட தொகுப்புகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
புதுக்கோட்டை தெற்கு 3, 4ஆ-ம் வீதிகள்,கீழராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள், ஏழைகளுக்கு இவை வழங்கப்பட்டன. தொடா்ந்து வடக்கு ராஜவீதியிலுள்ள மக்களுக்கு சனிக்கிழமை வழங்குவதாக சேட்டு தெரிவித்தாா்.
புதுக்கோட்டை கீழ 6-ஆம் வீதியிலுள்ள தினக்கூலிப் பணியாளா்களைக் கொண்ட 30 குடும்பங்களுக்கு, தினமும் 3 வேளை உணவு வழங்கும் பணியை விவேக்- நியாஸ் நண்பா்கள் குழுவினா் செய்து வருகின்றனா்.
இப்பணியின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை, உணவுடன் அக்குடும்பத்தினருக்காக புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் சாா்பில் 100 கிலோ அரிசியை அதன் தலைவா் ஆா்.எம். லட்சுமணன் வழங்கினாா்.