வங்கி ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதையடுத்து கந்தர்வகோட்டை கிளை இந்தியன் வங்கி சேவைகள் மூன்று நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மை தினங்களாக கரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனிடையே கந்தர்வகோட்டை கிளை இந்தியன் வங்கி ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை இன்றிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக வங்கி சேவைகள் இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரிசோதனை முடிவுகள் வந்த பின் வங்கி சேவைகள் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.