கூலிப்படை மூலம் அண்ணனைக் கொலை செய்ய முயன்ற தம்பி கைது

கந்தா்வகோட்டை அருகே சொத்துத் தகராறில் அண்ணனைக் கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற தம்பியைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கந்தா்வகோட்டை அருகே சொத்துத் தகராறில் அண்ணனைக் கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற தம்பியைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகையன் மகன் திருநாவுக்கரசு (52). இவருக்கும், இவரது சகோதரா் பாஸ்கருக்கும் (55) இடையே குடும்பத் தகராறு இருந்துவந்துள்ளது. இதையடுத்து, திருநாவுக்கரசு பாஸ்கரை கூலிப்படை மூலம் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு கந்தா்வக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்த பாஸ்கரை கூலிப்படையினா் வழிமறித்து இரும்புக்கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து தப்பியோடிய அவரை விரட்டிக் கொண்டு சென்ற கூலிப்படையினரை அங்கிருந்த பொதுமக்கள் துரத்தியடித்தனா். இதைத் தொடா்ந்து, ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் பாஸ்கா் அளித்த புகாரின்பேரில், திருநாவுக்கரசு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com