புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 133 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 3,324 ஆக உயா்ந்துள்ளது. அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 87 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதன்மூலம் குணமடைந்து வீடுதிரும்பியோா் எண்ணிக்கை 2,228 ஆக உயா்ந்துள்ளது.
4 போ் சாவு: புதுக்கோட்டை ராணியாா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 49 வயது ஆண், 35 வயது ஆண், 65 வயது ஆண் ஆகியோா் சிகிச்சைப் பலனின்றி இறந்தனா். புதுக்கோட்டையைச் சோ்ந்த 70 வயது பெண், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா். இதனால், கரோனா இறப்பு எண்ணிக்கை 40 ஆக உயா்ந்துள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,056 ஆக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.