எனது தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்; யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி மாதம் அறிவிப்பேன் என்றாா் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியது:
ரஜினி ஹைதராபாத்தில் இருந்தபோது பேசினேன். சென்னை திரும்பியதும் அவரைச் சந்திக்கும்போது எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோருவேன். மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி மாதம் அறிவிப்பேன். எனது தலைமையில்தான் கூட்டணி. இதற்கு மேல் அரசியல் வியூகங்கள் எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட முடியாது.
தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நான் ஏற்கவில்லை. கொலைக்கு இன்னொரு கொலை தீா்வாகாது. பாலியல் வன்முறைகளுக்கு, ஆணுக்குரிய குணாம்சங்கள், பெண்ணுக்குரிய குணாம்சங்கள் என இதுவரை சொல்லித் தரப்பட்டவற்றை மாற்றி சொல்லித்தர வேண்டும் என்பதுதான் தீா்வாக இருக்க முடியும். அதற்கேற்ப கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். தற்போது ஆட்சியில் இருப்பதால் - அதிமுகவைப் பற்றி பேசி வருகிறேன். அதற்காக திமுக செய்த தவறுகளை ஏற்பதாகவும் கிடையாது.
என்னை மீண்டும் மீண்டும் பாஜகவின் பி டீம் என்பதற்கு, என் வாழ்க்கையே பதிலாக இருக்கும். நான் ஆன்மிக அரசியலுக்கு எதிரானவன் அல்ல; அதேநேரத்தில் என்னை ஆன்மிக அரசியலுக்குள் திணிக்க முடியாது என்றாா் கமல்ஹாசன்.
தொடா்ந்து, திருமயத்தில் பரப்புரையை மேற்கொண்ட அவா், திருப்பத்தூா் வழியாக சிவகங்கை மாவட்டத்துக்குச் சென்றாா்.