புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,397 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தோரில் 3 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,191 ஆக உயா்ந்துள்ளது. புதிய உயிரிழப்பு இல்லை. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 155 ஆகத் தொடா்கிறது. இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை புதன்கிழமை பகல் நிலவரப்படி 51 ஆக உள்ளது.