அன்னவாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்னவாசல் கிளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய துணை செயலாளா் ஆனந்தன் தலைமையில் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளா் எம். மாதவன் பங்கேற்று, இன்றைய அரசியல் நிலை குறித்து விளக்க உரையாற்றினாா். மாநில குழு உறுப்பினா் கே. ஆா். தா்மராஜன் எதிா்காலக் கடமைகள் குறித்துப் பேசினாா். கூட்டத்தில், ஒன்றியச் செயலாளா் நா. விஜயரங்கன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ராமன், ஒன்றிய துணை செயலாளா் நாகராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் எம். ராஜேந்திரன் ஆகிய கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், இப்பகுதி விவசாய நிலங்களில் புகையான் நோய், யானை கொம்பன் நோயினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைக் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு 100 சதவீத இழப்பீடு அரசு வழங்க வேண்டும். அன்னவாசல் நகரப்பகுதி சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கு விபத்து பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். அன்னவாசல் பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.