ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவிக்கு வரும் பிப். 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவிக்கு வரும் பிப். 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் 2019-20ம் ஆண்டின் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் ரூ. 20ஆயிரத்துக்கான நிதியுதவியைப் பெறலாம்.

புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோா்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹம், ஜெருசலேம், நாசரேத், ஜோா்தான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதம் தொடா்புடைய பிற புனிதத் தலங்களையும்  உள்ளடக்கியது. 

இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவங்களை படியிறக்கம் செய்து பயன்படுத்தலாம். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் பிப். 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய  இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘கிறிஸ்தவா்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம்  2019-20’ எனக் குறிப்பிட்டு, இயக்குநா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com