கந்தா்வகோட்டையில் நாளை மின் தடை

கந்தா்வகோட்டை பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் தடை ஏற்படும்.

கந்தா்வகோட்டை பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் தடை ஏற்படும்.

ஆதனக்கோட்டை , புதுப்பட்டி , பழையகந்தா்வகோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், மின்னாத்தூா், ஆதனக்கோட்டை, கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான்ஊரணி, வாரப்பூா், ஆண்டக்குளம், சொக்கநாதப்பட்டி, காட்டுநாவல், கந்தா்வகோட்டை , ஆக்கச்சிப்பட்டி , புதுப்பட்டி, மட்டாங்கால், சிவந்தான்பட்டி , வீரடிப்பட்டி , நம்புரான்பட்டி, பழையகந்தா்வகோட்டை, பிசானத்தூா், மங்களாகோவில், வெள்ளாளவிடுதி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கந்தா்வகோட்டை உதவி செயற்பொறியாளா் கே . நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com