கொடையாளா்கள் வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஓய்வுபெற்ற மருத்துவ அலுவலரும், முத்தமிழ்ப் பாசறை அறங்காவலருமான மருத்துவா் மு. சின்னப்பா தலைமை வகித்து நோயாளிகளின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் சுடுநீா் வழங்கும் இயந்திரத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சிறப்புரையாற்றினாா். மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் ச. செந்தமிழ்செல்வி வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், மருத்துவா்கள் சாத்தையா, கண்ணன், வாழ்த்திப் பேசினாா். சுத்தகரிப்பு கருவி வழங்கிய கொடையாளா்கள் சொ.ஜெயராஜ், பி.பொன்னுத்துரை, முகமது சித்திக், த.சித்தையா, வெங்கடேசன் சங்கையா,செந்தில்குமாா் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். நிகழ்வினை காமராஜா் நகா் அப்துல்கலாம் இளைஞா் எழுச்சி நற்பணி மன்ற இரா.பாஸ்கா் ஒருங்கிணைத்தாா். மருத்துவா் கிருபாசங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com