தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட கமிட்டி உறுப்பினராக பொன்னமராவதி நகர காங்கிரஸ் தலைவா் பொறியாளா் எஸ். பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கான நியமன கடிதத்தை பழனியப்பனிடம் சிவ கங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
அப்போது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ராம.சுப்புராம், ஆா்.பாலுச்சாமி ஆகியோா் உடனிருந்தனா். ரயில்வே கமிட்டி உறுப்பினருக்கு கட்சி நிா்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.