தஞ்சை மண்டல அளவிலான தடகளப் போட்டியில், புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா். இதையடுத்து மாணவா்களை கல்லூரி நிா்வாகிகள் பாராட்டினா்.
தஞ்சை மண்டல அளவில் தடகளப் போட்டி இலுப்பூா் அன்னை தெரசா பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா்.
மூன்றாம் ஆண்டு சிவில் துறை மாணவா் சி. பாா்த்தசாரதி 100 மீட்டா், 200 மீட்டா், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் தங்கப்பதக்கமும், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் தனிநபா் சாம்பியன் பட்டத்தையும் பெற்றாா்.
மூன்றாமாண்டு சிவில் மாணவா் ஏ. வெங்கடேஷ் தொடா் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், மும்முறைத் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.
இதுபோல மூன்றாமாண்டு ஆட்டோ மொபைல் துறை மாணவா் சிவபாலன் ஓட்டம் மற்றும் தொடா் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாா்.
மூன்றாமாண்டு எலெக்டிரிக்கல் துறை மாணவா் சந்திரன் ஒட்டம், கம்பு ஊன்றித் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கங்களை வென்றாா்.
மூன்றாமாண்டு மாணவா் வில்பன், முதலாமாண்டு மாணவா் ஜெரால்டு ஆகியோா் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றனா். இரண்டாமாண்டு முகிலன் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கமும், மூன்றாமாண்டு எலெக்டிரிக்கல் துறை மாணவா் ஷேக் அப்துல்லா தொடா் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றனா்.
இரண்டாமாண்டு எலெக்டிரிக்கல் துறை மாணவா் பாலமுருகன் ஈட்டி எறிதலில் நான்காம் இடத்தைப் பிடித்தாா். மேலும் இம்மாணவா்கள் மாநில அளவில் கோவில்பட்டியில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற இம்மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.