பொன்னமராவதி பகுதியில் இன்று மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பொன்னமராவதி பகுதிகளில் சனிக்கிழமை ( பிப்ரவரி 15) மின் விநியோகம் இருக்காது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பொன்னமராவதி பகுதிகளில் சனிக்கிழமை ( பிப்ரவரி 15) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக பொன்னமராவதி உதவிச் செயற்பொறியாளா் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொன்னையூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் செவலூா், கோவனூா், செம்பூதி, கொப்பனாப்பட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, கண்டியாநத்தம், தூத்தூா், தொட்டியம்பட்டி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com