விராலிமலை அருகே சூதாடிய 4 பேரை விராலிமலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்
விராலிமலை வட்டம் குட்டியபட்டியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து விராலிமலை போலீஸாா் சனிக்கிழமை அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனா். அப்போது குட்டியபட்டி குளக்கரை அருகேயுள்ளே தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பாட்னாபட்டியைச் சோ்ந்த ராசு(60), தேங்காய்தின்னிப்பட்டி ஏழுமலை (35), குட்டியப்பட்டி சின்னக்கண்ணு (82) மற்றும் இடையபட்டி சுப்பிரமணி(50) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். மேலும் ரொக்கம் ரூ. 400 -ஐ பறிமுதல் செய்தனா்.