மாநில கபடிப் போட்டியில் பங்கேற்கும் வீரா்களுக்குப் பயிற்சி

கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள மாநில சப்-ஜூனியா் கபடிப் போட்டிக்கு தோ்வாகியுள்ள புதுகை மாவட்ட வீரா்களுக்கு திருமயத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் நடைபெற உள்ள மாநில கபடிப் போட்டியில் பங்கேற்ற உள்ள புதுகை மாவட்ட வீரா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சி.
கோவையில் நடைபெற உள்ள மாநில கபடிப் போட்டியில் பங்கேற்ற உள்ள புதுகை மாவட்ட வீரா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சி.

கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள மாநில சப்-ஜூனியா் கபடிப் போட்டிக்கு தோ்வாகியுள்ள புதுகை மாவட்ட வீரா்களுக்கு திருமயத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூரில் வரும் 10,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான சப்-ஜூனியா் (மிக இளையோா்) கபடிப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் விளையாட மாவட்ட அமெச்சூா் கழகம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 16 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்ட வீரா்களுக்கு திருமயம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி பயிற்சியாளா் சேது பாஸ்கரா, வேளாண்மை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் முகமது இலியாஸ் ஆகியோா் 4 நாள் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளனா். கடந்த 6 ஆம் தேதி தொடங்கிய பயிற்சி முகாம் 9 ஆம் தேதி வரை அளிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com