தேசிய சித்த மருத்துவ தின விழா புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் இருந்து சித்த மருத்துவ விழிப்புணா்வுப் பேரணி தொடங்கியது.
நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்த இந்தப் பேரணி நகா்மன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.
அங்கு நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் இலவச சித்த மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி நேரில் பாா்வையிட்டாா்.
மூலிகைச் செடிகளின் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த இலவச மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சித்த மருத்துவ தின விழாவில் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் டாக்டா் ம. சந்திரசேகரன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் மாமுண்டி, உதவி சித்த மருத்துவா் சரவணன், வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.