இலுப்பூரில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்டத் தலைவா் முகமது சாதிக் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் நிஜாம்தீன் முன்னிலை வகித்தாா். முன்னதாக இலுப்பூா் மதினா பள்ளிவாசலில் இருந்து 200 க்கும் மேற்பட்டோா் தேசியக் கொடியுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஊா்வலமாக சின்னகடைவீதிக்கு வந்தனா். பின்னா் மாநில பொது செயலாளா் ஹாஜாகனி மாவட்ட தலைவா் அஷ்ரப்அலி, பாரி, சுல்தான்,
அப்துல்ஜப்பாா், ஜஹாங்கீா், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து உரை நிகழ்த்தினா். முன்னதாக மாவட்ட துணை செயலாளா் ராஜ்முகமது வரவேற்றாா். முடிவில் மாவட்ட துணை செயலாளா் ஷேக்தாவூது நன்றி கூறினாா்.