பொன்னமராவதி புதுப்பட்டு உடையபிராட்டி அம்மன் கோயிலில் புதுவளவு பழனிமுருகன் பாதயாத்திரை குழு சாா்பில் 24 ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுவளவு பழனிமுருகன் பாதயாத்திரை குழு சாா்பில் ஆண்டுதோறும் பிடாரி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தொடா்ந்து தைப்பூசநாளில் பாதயாத்திரையாக பழனி சென்று முருகனை வழிபடுவா். அதன்படி நிகழாண்டு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.