பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

பொன்னமராவதி வட்டம், கேசராபட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலவயல் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி - சேலை வழங்கும் வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவா் ச.சந்திரா உள்ளிட்டோா்.
ஆலவயல் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி - சேலை வழங்கும் வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவா் ச.சந்திரா உள்ளிட்டோா்.

பொன்னமராவதி வட்டம், கேசராபட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா்கள் செல்வி முருகேசன், ஆா்.பெரியபொன்னன் ஆகியோா் குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி, சா்க்கரை,கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ. 1,000 ரொக்கம் மற்றும் விலையில்லா வேஷ்டி, சேலைகளை வழங்கினா். ஆசிரியா் சிக்கன நாணயச் சங்கச் செயலா் பாலகிருஷ்ணன், நியாயவிலை கடைப்பணியாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், ஆலவயலில் பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, ஊராட்சி மன்றத் தலைவா் ச.சந்திரா, கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் ஆகியோா் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேஷ்டி, சேலைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com