விராலிமலையில் ஜல்லிக்கட்டு தள்ளிவைப்பு

விராலிமலையில் வரும் ஜன. 19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக விராலிமலை ஜல்லிக்கட்டு பேரவை அறிவித்துள்ளது.

விராலிமலையில் வரும் ஜன. 19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக விராலிமலை ஜல்லிக்கட்டு பேரவை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், விராலிமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு கடந்த ஆண்டு சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. நிகழாண்டுக்கான விராலிமலை ஜல்லிக்கட்டு வரும் ஜன. 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகளை அமைச்சா் சி. விஜயபாஸ்கருடன் இருந்து செய்துவந்த அவரது தனி உதவியாளா் ஆா். வெங்கடேசன் சனிக்கிழமை நள்ளிரவில் காா் விபத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக ஜல்லிக்கட்டு பேரவையினா் அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com