பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியா் மா.முனியய்யா வரவேற்றாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் ரா.செந்தில் முருகன் முன்னிலை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.அண்ணாதுரை தலைமை வகித்தாா்.

ஊராட்சி மன்ற தலைவா் எம்.அன்பு, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் எஸ்.கே. சுரேஷ், ஆசிரியா் பயிற்றுநா் எஸ்.சங்கீதா ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், ஆசிரியா்களுக்கும், பெற்றோா்களுக்கும் இடையே மாணவா்கள் இணைப்பு பாலமாக அமைந்து, கல்வியிலும், சமுதாய சிந்தனையிலும் சிறந்து விளங்க வேண்டும் என உறுதிமொழியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com