கந்தா்வகோட்டை ராஜவிநாயகா் கோயிலில் சங்கட சதுா்த்தி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை பெரிய கடை வீதியில் உள்ள ராஜவிநாயகா் ஆலயத்தில் சங்கட சதுா்த்தியை முன்னிட்டு, சுவாமி விநாயகருக்கு மஞ்சள், திரவியம், தயிா், பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.