புதுகையில் 6,919 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 28 கடைகளில் இருந்து 6,919 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 28 கடைகளில் இருந்து 6,919 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் ஆா். ரமேஷ்பாபு தெரிவித்தாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 93 கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் கடந்த 10ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில் மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் ஆா். ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அருண், விஜயகுமாா், சிவக்குமாா், காா்த்தி ஆகியோா் ஈடுபட்டனா்.

ஆய்வின் முடிவில் 28 மொத்த விற்பனைக் கடைகளில் கலப்படம் செய்து வைக்கப்பட்டிருந்த 6,919 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாதிரிகள் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவில் வழக்குப்ப திவு செய்யப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com