அறந்தாங்கியில் மறைந்த பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவா் ஜீவா என்கிற ப.ஜீவானந்தத்தின் 57-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அறந்தாங்கிபேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நினைவஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்கு கட்சியின் நகரச் செயலா் அ.பெரியசாமி தலைமை வகித்தாா், புதுக்கோட்டை மாவட்டச் செயலா் மு.மாதவன், மாவட்டத் துணைச்செயலா் ஆ.ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.சொா்ணகுமாா், மக்கள் பாடகா் அறந்தை பாவா, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் ராஜேந்திரன், மற்றும் ஆட்டோ சங்கத்தினா், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்று, ஜீவாவின் உருவப்படத்துக்கு மலா்த் தூவி மரியாதை செலுத்தினா்.