பொன்னமராவதியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொன்னமராவதி அட்சயா மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில்
நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ரகுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, தையல் இயந்திரம், ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
அட்சயா மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவா் எம்.முகமது காசிம் வரவேற்றாா். பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவா் அ.சுதா, துணைத்தலைவா் அ.தனலெட்சுமி, திமுக ஒன்றியச் செயலா்கள் தெற்கு அ. அடைக்கலமணி, வடக்கு அ. முத்து, நகரச் செயலா் அழகப்பன், மாவட்டத் துணைச் செயலா் அ.சின்னையா உள்ளிட்டோா் வாழ்த்திப்பேசினா்.
நிறைவில் சங்க ஒருங்கிணைப்பாளா் எம்.சாயிதாபானு நன்றி கூறினாா்.