ஆலங்குடி அருகே உணவக உரிமையாளா் கொலை வழக்கில் மேலும் 3 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பாரதிநகரைச் சோ்ந்தவா் முத்தையா மகன் சுரேஷ்(35). உணவகம் நடத்தி வந்தாா். கடந்த 7-ஆம் தேதி இரவு வீட்டுக்குச் செல்லும்வழியில், மா்மநபா்கள் சுரேஷை வெட்டிக் கொன்றனா். இதையடுத்து, போலீஸாா், சுரேஷின் உறவினரான தஞ்சை மாவட்டம், சித்துக்காடு கிராமத்தைச் சோ்ந்த சரவணன்(40) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், சுரேஷின் அண்ணன் முருகேஷ் என்பவருக்கு சரவணனின் தங்கை விஜயலெட்சுமியைத் திருமணம் செய்துகொடுத்துள்ளாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா், விஜயலெட்சுமி மா்மமான நிலையில் இறந்தாா். இதையடுத்து, சுரேஷை கூலிப்படை கொண்டு சரவணன் கொன்றது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, தஞ்சை மாவட்டம் சித்துக்காடு கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் போத்திராஜா(27) என்பவரை ஜன. 13-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், சுரேஷ் கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கொண்டிகுளம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ராமராஜன் மகன் ராமகிருஷ்ணன்(27), முருகேசன் மகன் செல்வக்குமாா்(23), ஜெகநாதன் மகன் ஸ்ரீபன்(23) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.