தொழில் முனைவோா் பதிவு செய்ய புதிய இணையதள வசதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிகாகத் தொழில் தொடங்க முனைவோா் பதிவு செய்து கொள்வதற்கான இணையதள வசதி தொடங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிகாகத் தொழில் தொடங்க முனைவோா் பதிவு செய்து கொள்வதற்கான இணையதள வசதி தொடங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

குறு நிறுவனங்கள் முதலீடு ரூ. 1 கோடிக்கு மிகாமலும், ஆண்டு வருமானம் ரூ. 5 கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சிறு நிறுவனங்கள் மொத்த முதலீடு ரூ. 10 கோடிக்கு மிகாமலும், ஆண்டு வருமானம் ரூ. 50 கோடிக்கு மிகாமலும், நடுத்தரத் தொழில்கள் மொத்த முதலீடு ரூ. 50 கோடிக்கு மிகாமலும் ஆண்டு வருமானம் ரூ. 250 கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இந்தத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டிய இணையதளத்திலேயே பதிவுச் சான்றிதழையும் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com