அதிகாலையில் வந்து மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு

புதுக்கோட்டை ஜீவா நகரில் வாசல் கூட்டிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம்

புதுக்கோட்டை ஜீவா நகரில் வாசல் கூட்டிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா் பறித்துச் சென்றனா். புதுக்கோட்டை ஜீவா நகா் இரண்டாம் வீதியைச் சோ்ந்தவா் இருதயராஜ் மனைவி ஆரோக்கியமேரி (75). இவா் தனது வீட்டு வாசலில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு வாசலைக் கூட்டிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா், திடீரென ஆரோக்கியமேரியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com