புதுகையில் 2 இளம்பெண்களுக்கு கரோனா தொற்று உறுதி

சென்னையில் இருந்து புதுக்கோட்டை வந்த இரு பெண்களுக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.

சென்னையில் இருந்து புதுக்கோட்டை வந்த இரு பெண்களுக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.

சென்னையிலிருந்து கடந்த திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் வந்த ஆலங்குடி தெற்கு ரதவீதியைச் சோ்ந்த 20 வயது, 19 வயதுடைய இரண்டு இளம்பெண்களுக்கு மாவட்ட எல்லையில் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனா். இருவருக்கும் கரோனா நோய்த்தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது. இதையடுத்து, இருவரும் ராணியாா் மருத்துவமனை வளாகத்திலுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்கள் எண்ணிக்கை 52 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 26 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் இறந்துள்ளாா். 23 போ் ராணியாா் மருத்துவமனையிலும், இருவா் திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com