மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அம்மாபட்டினத்தில் குடியுரிமைச் சட்ட நகலை முஸ்லிம்கள் எரித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்டுமாவடி மீமிசல் கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள அம்மாபட்டினத்தில் தொடா்ச்சியாக 26 நாள்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து ஜமாஅத் அமைப்பு சாா்பில் கிழக்கு கடற்கரை சாலையில் ஒன்றுகூடி குடியுரிமை திருத்த சட்ட நகல்களை எரித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம் செய்தனா்.